பரமராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்’
(2 தீமோத்தேயு. 4 : 18)
2 தீமோத்தேயு 4 : 10 – 20
10. ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.
11. லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.
12. தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்.
13. துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.
14. கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.
15. நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன்.
16. நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.
17. கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.
18. கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
19. பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு.
20. எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்.
பவுலின் இந்த நம்பிக்கை, பவுலுக்கு மாத்திரமல்ல ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இருக்கவேண்டியது. நான் விசுவாசிக்கிற தேவன், எனக்காக தமது குமாரனையே பலியாக ஒப்புக்கொடுத்தவர், எல்லா தீமையினின்றும் என்னை இரட்சிப்பார். அது பெரிய திமையாக இருக்கலாம். அல்லது சிறிய தீமையாக இருக்கலாம் அது மனிதர்களால் ஏற்படும் தீமையாக இருக்களாம் அல்லது என்னுடைய சொந்த இருதயத்தின் தீமையாக இருந்தாலும் சரி, அது எவ்வளவு கொடியதாக இருந்தாலும் அவைகள் எல்லவற்றிலிருந்தும் என் தேவன் என்னை இரட்சிப்பார். அன்பானவர்களே! உன்னில் இவ்விதமான நம்பிக்கை உண்டா? இது எவ்வளவு உன்னதமான வாக்குத்தத்தம் பாருங்கள்! தேவாதி தேவன் ஒருவரால் மாத்திரமே இது கூடும். இந்த வாழ்க்கையை எவ்விதம் வெற்றியோடு கடந்து செல்ல இந்த நம்பிக்கை நமக்கு உதவும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு கிறிஸ்தவனின் முக்கிய குறிக்கோள் தேவனுடைய பரம ராஜ்யத்தை அடைவதுதான். இதை விட வேறு என்ன இருக்கமுடியும்? பவுல் அதைத்தான் இங்கு சொல்லுகிறார். தேவன் வாசஞ்செய்யும் மகிமைகரமான அந்த பரலோக ராஜ்யம் செல்வதே இந்த உலக வாழ்க்கையின் நோக்கம் என்பதை மறந்து விடாதே. இந்த உலகத்தில் ஐசுவரிய வானைபோல எல்லா உலக ஆசீர்வாதங்களையும் அனுபவித்து, நரகம் செல்வதைவிட தரித்திரமான லாசருவைபோல வறுமையால் வாடினாலும் மோட்சம் செல்லுவதே நமக்கு வேண்டும்.
இந்த மோட்ச ராஜ்யத்தை அடைவதற்காக எத்தனை பாடுகள், வேதனைகள், வருத்தங்கள், சோதனைகள் உண்டு. இவைகளையெல்லாம் நாம் ஜெயிக்கமுடியுமா? நம்மால் முடியாது, ஆனால் தேவனால் முடியும். பவுல் அந்த நம்பிக்கையைத்தான் இங்கு வெளிப்படுத்துகிறார். எல்லா தீமையினின்றும் இரட்சித்து கடைசி மட்டும் காப்பாற்றுவார், பாதுகாப்பார் என்று சொல்லப்படுகிறது. ‘அவர் தமது பரிசுத்தவாங்களை கைவிடுவதில்லை; அவர்கள் என்றென்றைக்கும் காக்கப்படுவார்கள்.’ (சங்கீதம், 37 : 28)
free books for download
Sermon Download
Reformed Baptist Church - website
You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.