‘நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி எங்கள் நாட்களை எண்ணும்
அறிவை எங்களுக்கு போதித்தருளும்.’
(சங்கீதம் 90 : 12 )

சங்க் 90 : 1 – 12

1. ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.

2. பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.

3. நீர் மனுஷரை நிர்த்தூளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள் என்கிறீர்.

4. உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது.

5. அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

6. அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோம்.

7. நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து, உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம்.

8. எங்கள் அக்கிரமங்களை உமக்குமுன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.

9. எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒரு கதையைப்போல் எங்கள் வருஷங்களைக் கழித்துப்போட்டோம்.

10. எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.

11. உமது கோபத்தின் வல்லமையையும், உமக்குப் பயப்படத்தக்க விதமாய் உமது உக்கிரத்தையும் அறிந்துகொள்ளுகிறவன் யார்?

12. நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.

தேவ மனிதனாகிய மோசே, தேவனை நோக்கி இவ்விதமான ஜெபத்தை ஏறெடுக்கிறான். மற்ற தேவ மனிதர்கள் பெறாத உன்னத சிலாக்கியங்களைப் பெற்றான் மோசே. தேவனுடைய மகத்துவமான அற்புதங்களையும் கண்டவர். தேவனுடைய பர்வதத்தில் ஏறி நாற்பது நாட்கள் தேவனோடு வாசம் பண்ணின மனிதன். அந்த 40 நாட்கள் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஆனால் அவ்விதமான மனிதன் தனக்கு ஞான இருதயம் வேண்டும் என்று வாஞ்சித்து தேவனை நோக்கி ஜெபிக்கிறார் அருமையான நன்பரே! ஆவிக்குறிய ஞானமுள்ள இருதயம் நமக்குத் தேவை. இன்றைக்கு உலக ஞானம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் தேவ ஞானமற்ற மனிதன் பிரயோஜனமற்றவன். அழிந்துப்போகிற ஞானத்தால் நித்திய ஜீவனை பெறமுடியாது.

இவ்விதமான ஞானமுள்ள இருதயத்தைப் பெற தங்களுக்கு நாட்களை எண்ணும் அறிவைப் போதிக்கும்படி மோசே கேட்க்கிறார். நம் நாட்கள் இந்த பூமியில் எவ்வளவு நிலையற்றது. நித்தியத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது இந்த உலக நாட்கள் இம்மியிலும் அற்பமானதாக இருக்கிறது. ஆனால் அதற்குள்ளாக மனுஷன் எவ்வளவாய் அதையும் இதையும் சாதித்து உலகத்தின் மேன்மைக்காகப் பாடுபடுகிறான்.

மேலும் மோசே ‘எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது. ஒரு கதையைப் போல எங்கள் வருஷங்களைக் கழித்துப் போட்டோம். எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் என்பதுவருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே’. அது சீக்கிரமாய் கடந்து போகிறது. நாங்களும் பறந்து போகிறோம்.’ மேலும் மோசே ஒரு அழகான ஜெபம் செய்கிறார். அது நம்முடைய ஜெபமாக இருக்கட்டும். ‘தேவ்ரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்சியாக்கும்.’ (சங்கீதம் 90 : 10 , 15 )

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.