“நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்” .
(லேவி 22:32)
வேத பகுதி | லேவி 22:17-33
தேவன் தம்முடைய மக்களை பரிசுத்தப்படுத்துகிறவராக இருக்கிறார். மேலும் அவர்களிடத்தில் பரிசுத்தத்தை எதிர்பார்க்கிறவராக இருக்கிறார். பரிசுத்தத்தை நாடுவது ஒரு கிறிஸ்தவனின் அதிமுக்கியமான குணாதிசயமாகும். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாது. தேவன்: “இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்” (யாத் 19:5-6). நம்முடைய வாழ்க்கையில் பரிசுத்தமில்லாமல் ஒருபோதும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கமாட்டார்.
அதே வசனத்தில் தேவன்: “என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருப்பீர்களாக” (லேவி 22:32) என்று சொல்லுகிறார். கிறிஸ்தவர்கள் பரிசுத்தமில்லாமல் வாழும் பொழுது தேவனுடைய பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தகுலைச்சலாக்குகிறார்கள். மேலும் தேவன்: “நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்” (லேவி 22:32) என்று சொல்லுகிறார். வாழுகிற இந்நாட்களில் ‘நாம் அதிக பக்தி உள்ளவர்கள்’ என்று எண்ணிக் கொண்டாலும் “பரிசுத்தம்” இல்லையென்றால் கர்த்தர் நம்மேல் பிரியமாயிரார். நாம் தேவனுடைய நாமத்தை பரிசுத்தகுலைச்சல் செய்கிறவர்களாகக் காணப்படுவோம். ஆகவே நாம் பரிசுத்ததுடன் வாழ்ந்து தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவோமாக.
free books for download
Sermon Download
Reformed Baptist Church - website
You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.