‘கொந்தளிப்பை அமார்த்துகிறர், அதின் அலைகள் அடங்குகிறது’
(சங்கீதம் 107 : 29)

சங்கீதம் 107 : 20 — 30

20. அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.

21. அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,

22. ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக.

23. கப்பலேறி, கடல்யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே,

24. அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.

25. அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்.

26. அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது.

27. வெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது.

28. அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.

29. கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.

30. அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.

இதற்கு முந்திய பிந்திய வசனங்களைப் பார்க்கும்போது இது எந்தவிதமான கொந்தளிப்பு என்பதை விளங்கிக் கொள்ளமுடியும். இது சாதாரண கொந்தளிப்பல்ல. கடலின் கொந்தளிப்பு. இந்த உலகில் கடலின் கொந்தளிப்பை யார் அடக்கமுடியும்? அன்பானவர்களே! நமது வாழ்க்கையிலும் கடலின் கொந்தளிப்பைப் போன்றவைகள் எழும்பலாம். யாராலும் அடக்கக்கூடாததைப் போல காணப்படுகின்ற காரியங்கள் வரலாம். வாழ்க்கை பிரயானத்தில் இவ்விதமான வேளைகள் ஏற்படலாம். ஆனால் நாம் எவ்விதம் இந்த கொந்தளிப்புகளை கடந்து செல்வது? நாம் கொந்தளிப்பை அடக்குகிறவரிடத்தில் செல்லவேண்டும். அவரே அந்த கொந்தளிப்பை அடக்குவார். அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும். காற்றும் கடலும் இவருக்கு கீழ்படிகிறதே என்று அறியத்தக்கதாக அதை நம்முடைய வார்த்தையினால் அடக்கியவர் அவர். அவரிடத்தில் நாம் கொந்தளிப்பை எடுத்துச்செல்லும்போது அவர் அதை எப்படி அமர்த்தவேண்டுமோ அவ்விதம் செய்வார்.

அடுத்த வசனத்தை வாசித்துப்பாருங்கள். ‘அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தாஷப்படுகிறார்கள். தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக்கொண்டு வந்து சேர்க்கிறார். (சங்கீதம் 107 : 3) கொந்தளிப்பு அடங்கி அமைதலுண்டானது என்று பார்க்கிறோம். உங்கள் வாழ்க்கையின் கொந்தளிப்பு எவ்வளவு கொடியதாக இருந்தாலும் அமைதலுண்டாகும். தேவன் எல்லா கொந்தளிப்பையும் அமர்த்துவார். மேலும் அவர்கள் இந்தக் கொந்தளிப்பில் அமிழ்ந்துவிட்டார்கள் என்று சொல்லப்படவில்லை. அவர்கள் பத்திரமாக துறைமுகத்தை வந்தடந்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதை செய்தவர் யார்? ‘தேவனே’ நீங்கள் உங்கள் சொந்த அறிவினால் இதைக் கடந்து செல்லமுடியாது ஆனால் தேவன் அவ்விதம் செய்வார். துறைமுகத்தில் அவர்களைக் கொண்டு வந்து சேர்க்கிறார்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.