“இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்”

 

 (ஓசியா 14:1).  

            

வேத பகுதி | ஓசியா 14

1. இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.2. வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம்.3. அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் கிரியையைப்பார்த்து: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள்.4. நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.5. நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.6. அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்.7. அவன் நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படருவார்கள்; அவன் வாசனை லீபனோனுடைய திராட்சரசத்தின் வாசனையைப்போல இருக்கும்.8. இனி எனக்கும் விக்கிரகங்களுக்கும் என்ன என்று எப்பிராயீம் சொல்லுவான்; நான் அவனுக்குச் செவிகொடுத்து, அவன்மேல் நோக்கமாயிருந்தேன்; நான் பச்சையான தேவதாரு விருட்சம் போலிருக்கிறேன்; என்னாலே உன் கனியுண்டாயிற்று என்று எப்பிராயீம் சொல்லுவான்.9. இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.

ஆண்டவருடைய அன்பினால் கொடுக்கப்படுகிற ஒரு எச்சரிப்பாய் இது இருக்கிறது என்பதைப் பார்க்கிறோம். ஒருவேளை இந்த நாட்களில் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவனை விட்டுப் பின்வாங்கிப் போயிருப்பீர்கள் என்றால், அவர் உங்கள் பெயரைச் சொல்லி அழைக்கிறார். தேவன் நம்மில் அன்புகூருகிறதின் நிமித்தமாகவே அவர் பெயர்ச் சொல்லி அழைக்கிறார். இன்னுமாக இந்த தேவன் உன்னுடைய தேவனாகவே இருக்கிறார். தேவனுடைய அன்பும் பொறுமையும் மிகப் பெரியது. இதை நாம் சிந்திக்கும்பொழுது நமக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கையை ஆண்டவர் வைத்திருக்கிறார்! நாம் தேவனிடத்தில் திரும்புவது அவசியம். அப்பொழுது மாத்திரமே நம்முடைய காரியம் செவ்வைப்படுத்தப் படும். நம்முடைய பாவத்தினாலே நாம் விழுந்தோம். அது நமக்கும் ஆண்டவருக்கும் இருக்கும்படியான அன்பின் இணைப்பைத் துண்டித்து விடுகிறது. நாம் கைவிடப்பட்டவர்களைப் போலக் காணப்படுகிறோம். ஆனாலும் தேவன் இன்று உங்களை அழைக்கிறார். நாம் எந்த நிலையிலிருந்து விழுந்தோம் என்பதை எண்ணி மனந்திரும்புவோம். கர்த்தரிடத்தில் திரும்புவோம். அவர் நம்முடைய வாழ்க்கையைக் கட்டுவார். அப்பொழுது தேவனுடைய மகிமை நம் வாழ்க்கையில் விளங்கும்.  

 

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.