‘என் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது’ (யோபு 9 : 25 )

யோபு 9 : 25 – 35

25. என் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது; அவைகள் நன்மையைக் காணாமல் பறந்துபோம்.

26. அவைகள் வேகமாய் ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது.

27. என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால்,

28. என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்; என்னைக் குற்றமில்லாதவனாக எண்ணமாட்டீர் என்று அறிவேன்.

29. நான் பொல்லாதவனாயிருந்தால், விருதாவாய்ப் போராடவேண்டியது என்ன?

30. நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும்,

31. நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் வஸ்திரமே என்னை அருவருக்கும்.

32. நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறதற்கும், நாங்கள் கூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனுஷன் அல்லவே.

33. எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே.

34. அவர் தமது மிலாற்றை என்னைவிட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.

35. அப்பொழுது நான் அவருக்கு பயப்படாமல் பேசுவேன்; இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.

யோபு தன்னுடைய வாழ்க்கை எவ்வளவு குறுகியது என்று சொல்லுகிறார். ஆனால் இந்தக் குறுகிய வாழ்க்கையை நாம் எவ்விதம் கழிக்கிறோம் என்பது மிக மிக முக்கியம். இன்றைக்கு அநேகர் எப்போதும் இந்த உலகத்தில் ஜீவித்துக்கொண்டேயிருப்போம் என்ற உணர்வோடு ஜீவிக்கிறார்கள். தங்கள் வாழ்நாள் குறுகியது என்றும் மரணம் நெருக்கமாயிருக்கிறது என்றும் எண்ணுவதில்லை. இந்த வாழ்நாளில் உலகத்துக்கடுத்த காரியங்களில் நான் என்ன சாதிக்கமுடியும், நான் எதைப் பெறமுடியும் என்று அநேகக் காரியங்களில் ஈடுபட்டு செயல்படுகிறார்கள். அல்லது கடைசிக் காலங்களில் தேவனை தேடினால் போதும் என்றும் எண்ணுகிறார்கள். ஆனால் அவ்விதம் எண்ணுகிறவர்களில் அநேகர் தேவனை கண்டுக்கொள்ளாமலேயே மரித்துவிடுகிறார்கள். மரணம் நம்மிடத்தில் சொல்லிவருவதில்லை, எந்த நேரத்திலும் வரலாம். தேவன் ஒருவரே அதன் வேளையை அறிந்திருக்கிறார்.

தேவன் கொடுத்திருக்கிற காலத்தில் தேவனைத் தேடவில்லையென்றால் நம்மைப்போல மதியீனமானவர்கள் யார் இருக்கக்கூடும்? இந்தக் குறுகிய நாட்களில் தேவனுக்காக வாழ்வது ஒன்றுதான் நிலைத்திருக்கும். நீ இந்த உலகத்தில் எவ்வளவுதான் சாதித்தாலும், சம்பாதித்தாலும் அது உனக்கு நித்தியத்திற்கென்று ஒன்றும் பிரயோஜனமாயிருக்காது. உண்மையான விசுவாசி எப்படி சிந்திப்பான்? என்னுடைய நாட்கள் தாவீது சொல்லுவது போல ‘உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும், பரதேசிகளுமாயிருக்கிறோம்; பூமியின் மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது. நிலைத்திருப்போம் என்ற நம்பிக்கையில்லை’ (1நாளா 29: 15) என்பதைப்போல இருக்கிறது. ஆனாலும் இந்த நாட்களில் நான் தேவனுக்கேன்று என்ன செய்யமுடியுமோ அவைகளைச் செய்யவேண்டும். இக்கால வாழ்க்கையில் தேவனுக்கென்று வாழுவாயானால் உன்முடிவு பவுல் சொல்வது போல சமாதானமுள்ளதாயிருக்கும். ‘இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது’ (2தீமோத்தேயு. 4 : 8 )

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.