‘கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின்மேல் மூண்டது இஸ்ரவெல் யூதா என்பவர்களை இலக்கம்பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.’
2 சாமுவேல் 24 : 1

2 சாமுவேல் 24 : 1 -15

1. கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.

2. அப்படியே ராஜா தன்னோடிருக்கிற சேனாபதியாகிய யோவாபைப் பார்த்து: ஜனங்களின் இலக்கத்தை நான் அறியும்படிக்கு நீ தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேலரின் கோத்திரமெங்கும் சுற்றித்திரிந்து ஜனங்களைத் தொகையிடுங்கள் என்றான்.

3. அப்பொழுது யோவாப் ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஜனங்களை இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும், நூறுமடங்கு அதிகமாய் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் என் ஆண்டவனாகிய ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான்.

4. ஆகிலும் யோவாபும் இராணுவத்தலைவரும் சொன்ன வார்த்தை செல்லாதபடிக்கு, ராஜாவின் வார்த்தை பலத்தது; அப்படியே இஸ்ரவேல் ஜனங்களைத் தொகையிட, யோவாபும் இராணுவத்தலைவரும் ராஜாவைவிட்டு புறப்பட்டுப்போய்,

5. யோர்தானைக் கடந்து, காத் என்னும் ஆறுகளின் நடுவே இருக்கிற பட்டணத்திற்கு வலதுபுறமான ஆரோவேரிலும் யாசேரிடத்திலும் பாளயமிறங்கி,

6. அங்கேயிருந்து கீலேயாத்திற்கும் தாதீம்ஒத்சிக்கும் போய், அங்கேயிருந்து தாண்யானுக்கும், சீதோனின் சுற்றுப்புறங்களுக்கும் போய்,

7. பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர் கானானியருடைய சகல பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய்,

8. இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதமும் இருபதுநாளும் ஆனபிற்பாடு எருசலேமுக்கு வந்தார்கள்.

9. யோவாப் ஜனத்தை இலக்கம்பார்த்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள்.

10. இவ்விதமாய் ஜனங்களை எண்ணினபின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது; அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும், நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.

11. தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:

12. நீ தாவீதினிடத்தில் போய், மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

13. அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ? அல்லது மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறு உத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான்.

14. அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.

15. அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமேதொடங்கி குறித்தகாலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள்.

‘கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின்மேல் மூண்டது இஸ்ரவெல் யூதா என்பவர்களை இலக்கம்பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.’ (2 சாமுவேல் 24 : 1)

 தாவீது ஆடுகளை மேய்த்துகொண்டிருந்த எளியவன். ஆனால் தேவன் அவனைத் தெரிந்துக்கொண்டு அற்பமானவனாயிருந்த அவன் சிங்காசனம் ஏறும் அளவுக்கு உயர்த்தப்பட்டான். தேவன் தாவீதுக்கு அநேக வெற்றிகளை யுத்தங்களில் கட்டளையிட்டார். எல்லருக்கும் முன்பாகவும் தாவீது உயர்த்தப்பட்டான். இவைகள் எல்லாம் கர்த்தரால் உண்டானது. அவனுடைய பெரிய வெற்றிகள் அவனுடைய சேனைகளின் மிகச்சிறந்த திரமையினால் அல்ல, தேவனால் அருளப்பட்டது. ஆனால் தாவீது இதை மறந்துவிட்டான். தன்னையும் தன்னுடைய படை பலத்தையும் எண்ணிப் பெருமைப்பட ஆரம்பித்தான். ஜனப்பெருக்கத்தை எண்ணி பெருமைகொண்டான். ஜனம் தேவனால் கொடுக்கப்பட்டது என்று எண்ணி தேவனுக்கு மகிமையைச் செலுத்தாமல் தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டான். ஒருவேளை இவ்வளவு ஜனங்களுக்கு, தான் ராஜா என்று எண்ணி பெருமையடைந்திருக்ககூடும். அவருடைய இந்த எண்ணம் செயலில் வெளியாயிற்று.

அன்பானவர்களே! உங்களுடைய வாழ்க்கையில் இவ்விதம் உங்களை உயர்வாகவும் பெருமை உள்ளவர்களாகவும் எண்ணிக்கொள்ளுகிறீர்களா? தேவன் கொடுத்த அநேக நன்மைகள் உங்களுடைய திறமையால், பெலத்தால் உண்டானது என்று எண்ணுகிறீகளா? பெருமை எப்போதும் ஒரு மனிதனை கீழே தள்ளிவிடும். ஆனால் அவன் அதைச் செய்த பின்பாகவே அவன் இருதயம் வாதித்தது. பாவம் வஞ்சகமானது. அதைச் செய்யும் வரை அதனுடைய கொடூரம் வெளிப்பட்டது. ஆனால் அதன் பின்பு அதனுடைய கூர்மை வெளிப்படும். தாவீது செய்த பாவத்தினிமித்தம் அதன் விளைவை பாருங்கள். ‘கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமே தொடங்கி குறித்த காலம்வரைக்கும் கொள்ளை நோயை வரப்பண்ணினார்; ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள். (2 சாமு 24 : 15 ) நமது பாவத்தின் விளைவு மற்றவர்களையும் பாதிக்கும் என்பதை எண்ணி பாவத்தைக் குறித்து பயப்படுவோமாக.

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.