’அவர் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்’
(எபேசியர் 1 : 3)

மத் 16:1-26

1. தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:

2. நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.

4. தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,

5. பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,

6. தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.

7. அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.

8. அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.

9. காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று,

10. தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.

11. மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு,

12. தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.

இந்த உலகத்தில் அநேக காரியங்களை பெற்றுக்கொள்ளக்கூடும். ஆனால் அதே சமயத்தில் இந்த உலகத்தில் எங்கும் கிடைக்காதவைகளும் உண்டு. அவைகளை தேவனால்தான் நமக்கு கொடுக்கமுடியும். இந்த உலக ஆசீர்வாதங்களை அநேக மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அநேகர் விரும்புவதில்லை அந்த அளவுக்கு வாஞ்சிப்பதில்லை, ஏன்? அதன் மேன்மையை, விலையேற பெற்ற உயர்வை அறியாததினால்தான். உனக்கு ஆவிக்குரிய நற்குணங்கள் தேவையில்லையா? உன் வாழ்க்கையில் அவைகள் இல்லாததினால்தான் நீ இவ்விதமான ஆவிக்குரிய தோல்வியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.’ உனக்கு ஆவியானவரின் நற்கனிகள் தேவை. உனக்கு பொறுமை, நீடிய சாந்தம் தேவை. இவைகள் இல்லாததினால் நீ அநேக பிரச்சனைகளைச் சந்திக்கிறாய், மனசமாதானத்தை இழந்து விடுகிறாய். ஆவியின் நற்கனிகள் உன்னில் இல்லாததினால் நீ பாவத்திற்கேதுவாகப் பேசுகிறாய், செயல்படுகிறாய்.

நீ அவ்விதம் வாழவேண்டிய அவசியமில்லை ஆவிக்குரிய தரித்திரம் மிகவும் கொடியது. சரீரபிரகாரமான தரித்திரம் நீங்கிவிடும். ஆனால் ஆவிக்குரிய தரித்திரம் உன் வாழ்க்கையில், உன்னை நிர்பந்தமான மனுஷனாய் வைத்திருக்கிறது. மெய்யான ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் தேவன் இவ்விதமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார், ஆசீர்வதிக்கிறார். நீ விசுவாசத்தோடு தேவனிடத்தில் சென்று அவைகளைப் பெற்றுகொள். அவருடைய கிருபையை அண்டிக்கொள். தேவனிடத்தில் ஜெபி. தேவன் உனக்கு கிறிஸ்துவின் மூலமாய் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெற இயேசுவின் சிலுவையை விசுவாசத்தோடு நோக்கிப்பார். நீ ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதை உணர்வாய். அவைகளில் நிலைத்திருந்து வெற்றியுள்ள கிறிஸ்தவனாய் வாழ்.

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.