கட்டளைகளை மறவேன்

‘நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்;
ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.’
(சங்கீதம் 119 :141)

சங் 119 : 137 – 144

137. கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.

138. நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.

139. என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என் பக்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது.

140. உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.

141. நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.

142. உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.

143. இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி.

144. உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.

விசுவாசிகள் என்று சொல்லிக்கொள்ளும் அநேகர் வெகு சீக்கிறத்தில் தங்கள் பக்தியை அலட்சியப் படுத்திவிடுகிறார்கள், தள்ளிவிடுகிறார்கள். அற்பமான ஒரு சிறிய கஷ்டம் வந்தாலும் அதை சகித்து, தேவன் பேரில் வைக்கும் விசுவாசத்தினால் அதை மேற்கொள்வதில்லை. ‘நான் தேவனை பின்பற்றி என்ன பிரயோஜனம்? எனக்குதானே இவ்விதமான கஷ்டங்கள். நான் இனிமேல் அலயத்திற்குபோகமாட்டேன். ஜெபிக்கமாட்டேன். வேதம் வாசிக்கமாட்டேன். தேவ பிள்ளைகளின் ஐக்கியம் எனக்கு வேண்டாம். நான் என் வழியைப் பார்த்துக் கொள்வேன்.’ என்று எப்படி சுலபமாக தேவனுடைய காரியங்களை அற்பமாய் பேசி; அசட்டை பண்ணிவிடுகிறார்கள்.

சங்கீதக்காரன் இங்கு எவ்வளவு அழகாக சொல்லுகிறார் பாருங்கள். ‘ஆம், நான் சிறியவனாய் இருக்கிறேன். மற்றவர்களுடைய பார்வையில் அற்பமாய் எண்ணப்படுகிறேன். என்னை யாரும் மதிப்பதில்லை. என்னைக் கிள்ளுக்கீரையாக எண்ணுவோர் பலர். அதோடு மாத்திரமல்ல நான் எல்லோராலும் அசட்டைப் பண்ணப்படுகிறேன். என்னை மற்றவர்கள் புறக்கணிக்கிறார்கள். என்னை யாரும் விரும்புவதில்லை.

அருமையான சகோதரனே! சகோதரியே! நீ அவ்விதமான நிலையில் இருக்கிறாயா? சோர்ந்து போகாதே. தாவீதும் அவ்விதமான பாதையை கடந்து வந்தான். ஆனால் அவன் என்ன சொல்லுகிறான் பாருங்கள். ‘ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்’. நீ அப்படி சொல். தேவன் ஏற்ற நேரத்தில் கைவிடாமல் உயர்த்துவார். அவர் மனிதர்களைப் போல் அல்ல. மறந்துவிடாதே. ‘ அவர் சிறியவனை புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்: எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறார்’ (சங்கீதம் 113 : 7) எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப் போலாக்குகிறார். ‘(சங்கீதம் 107 : 41) இந்த வாக்குதத்தங்களைப் பற்றிக்கொண்டு உண்மையாய் ஜெபிப்பாயானால், தேவன் நிச்சயமாக உன் வாழ்வில் பெரிய காரியங்களைச் செய்வார்.

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.