‘என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக’ (எண் 14 : 18)

எண்ணாகமம் 14 : 10 – 20

10. அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது.

11. கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?

12. நான் அவர்களைக் கொள்ளைநோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.

13. மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர் இதைக் கேட்பார்கள்; அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே.

14. கர்த்தராகிய நீர் இந்த ஜனங்களின் நடுவே இருக்கிறதையும், கர்த்தராகிய நீர் முகமுகமாய்த் தரிசனமாகிறதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்கிறதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன் செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள்; இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள்.

15. ஒரே மனிதனைக் கொல்லுகிறதுபோல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால், அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார்:

16. கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விடக் கூடாதேபோனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.

17. ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவர் என்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே,

18. என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக.

19. உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.

20. அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன்.

இந்த வார்த்தை மோசேயினால் எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை யோசித்துப் பாருங்கள். கானான் தேசத்தை உலவுப் பார்க்கச்சென்ற 12 பேரில் காலேப் யோசுவா, இருவரையும் தவிர மற்ற 10 பேரும் கானான் தேசத்தை சுதந்தரிக்க முடியாது என்ற துர்ச் செய்தியை பரப்பினார்கள். வெகுசீக்கிறத்தில் இஸ்ரவேல் மக்கள் மத்தியில் பரவியது. எவ்வளவு சீகிரம் காலேப், யோசுவா மூலமாய் சொல்லப்பட்ட விசுவாச வார்த்தையைக் காட்டிலும் துர்ச்செய்தி பரவியது பாருங்கள்! மோசேயின் மேலும், மோசேயோடே இருந்தவர்கள் மேலும் கல்லெரிய வேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள். தேவனோ இஸ்ரவேல் மக்கள் அனைவரையும் அழிப்பேன் என்றும், மோசேயையோ பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றும் சொன்னார். அந்த நேரத்தில் மோசே இவ்விதமாய் ஜெபித்தார். ‘ஆணடவரே! இந்த பாதகமான சூழ்நிலையை மாற்றத்தக்கதாக உமது வல்லமை பெரிதாய் விளங்குவதாக.’

ஆம்! தேவனுடைய மகிமையைக் குறித்து மோசே வைராக்கியமாய் காணப்பட்டார். ஒரு மெய் ஊழியன் முதலாவது தேவனுடைய நாமத்தின் மகிமையை வெளிப்படுத்துவதையே வாஞ்சிப்பான். நடந்தது என்ன? அவ்விசுவாசத்திற்கு காரணமானவர்களை தேவன் தண்டித்தார். ‘அந்த தேசத்தை சோதித்துப்பார்க்கும்படி மோசேயினால் அனுப்பப்பட்டு திரும்பி, துர்செய்தி கொண்டுவந்து சாபையார் எல்லோரும் அவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கும்படி செய்தவர்களாகிய மனிதர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள்’ (எண் 14 : 36, 37). அது மாத்திரமல்ல அந்த பொய்யை நம்பின மக்களின் மதியீனத்தை தேவன் விளங்கப்பண்ணினாரா’ (எண் 14 : 44, 45 ) அவருடைய மகிமையை வெளிப்படுத்தினார். நாம் ஆண்டவருடைய நாமத்தின் மகிமையைக் குறித்து நம்முடைய வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும், சபையிலும் வைராக்கியமுள்ளவர்களாய் இருக்கிறோமா? இன்றைய கிறிஸ்தவ மக்கள் அப்படியல்ல! நீ எப்படி?

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.