‘கர்த்தர் எனக்கு சகாயர், நான் பயப்படேன்’
(எபி, 13 : 6)

மீகா 5:1-15

1. சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது.

2. அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.

3. கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.

4. விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.

5. நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

6. அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே.

7. தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.

8. இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

அதாவது கர்த்தர் எனக்கு உதவி செய்கிறவர், நான் பயப்படேன். எல்லா நேரத்திலும் எனக்கு அவர் சகாயராய் இருக்கிறார். கர்த்தர் எனக்கு சகாயர் என்று விசுவாசிக்கிற விசுவாசம் பயத்தை புறம்பே தள்ளும். கோடானகோடி தேவனுடைய பரிசுத்தவான்கள் தேவனை அவர்களுடைய சகாயராகக் கண்டிருக்கிறார்கள். உனக்கும் அவ்விதமாகவே இருப்பார். உனக்கு உதவி தேவை என்று அறிகிற வேளையில் அவரை நோக்கிப்பார். சங்கீதகாரனைப்போல நீரே எனக்கு சகாயர், என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்’ என்று ஜெபி. தேவன் அனுகூலமான துணையாய் இருந்து உதவி செய்வார்.

உன்னை பயம் பற்றிக்கொண்டிருக்கிற நேரத்தில் ஒன்றை அறிந்துக்கொள். விசுவாசம் இல்லாத இடத்தில் பயம் வரும். நீ பயத்தினால் பீடிக்கப்பட்டிருப்பாயானால், அவ்விசுவாசத்தினாலும் பீடிக்கப்பட்டிருக்கிறாய் என்று அர்த்தம். மெய் விசுவாசம் பயத்தை புறம்பே தள்ளும். பயம் உன்னை அலைகழிக்கும் பொழுது அவ்விசுவாசம் உன்னை ஆட்க்கொண்டிருக்கிறது என்று அறிந்து தேவனிடத்தில் கதரி ஜெபி. ‘தேவனே நீர் என் சகாயர், நான் ஏன் பயப்படவேண்டும்? பயம் உனக்குரியதல்ல. உம்மை நம்பமுடியாதிருக்கிற அவிசுவாசத்தை எனக்கு மன்னித்து உம்மை முழுமையாய் சார்ந்துக் கொள்ள எனக்கு கிருபை செய்யும்.’

இன்னுமாய் திக்கற்ற பிள்ளைகளுக்க சகாயர் நீரே’ (சங்கீதம் 10 : 14) என்று சொல்லியிருக்கிறீரே. நான் திக்கற்றவன், எனக்கு உம்மைத் தவிர வேறொரு தகப்பன் இல்லை, எனக்கு இரங்கும். நீர் சொல்லுகிறவர் மட்டுமல்ல அதைச் செய்கிறவர் என்று அறிக்கையிடுகிறேன்.’ என்று ஜெபி. அப்பொழுது நீ ‘இதோ எனக்கு சகாயர், ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்’ (சங்க் 54 : 4) என்று சொல்லுவாய். நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு தேவையும் மெய் சகாயரை நாம் நோக்கிப்பார்க்க நம்மை வழிநடத்தட்டும். பிசாசு தேவைகளின் நேரத்தில் உன்னை சோர்ந்துபோகச் செய்யப்பார்ப்பான். அவனுக்கு இடங்கொடாதே. சகாயரை நோக்கிப் பார். வெட்க்கப்படாய்.

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.