என்மேல் இரக்கமாயிரும்  | ப்ரல் :   2  

 

கர்த்தாவே என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு
விரோதமாய் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவை
குணமாக்கும் என்று நான் சொன்னேன்.’

 

 (சங்கீதம் 41 : 4)  

            

வேத பகுதி | சங்கீதம் 41 : 1 – 13

1. சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.

2. கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர்.

3. படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.

4. கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.

5. அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள்.

6. ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய்ப் பேசுகிறான்; அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலேபோய், அதைத் தூற்றுகிறான்.

7. என் பகைஞரெல்லாரும் என்மேல் ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து, எனக்குப் பொல்லாங்கு நினைத்து,

8. தீராவியாதி அவனைப் பிடித்துக்கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.

9. என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.

10. கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும்.

11. என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.

12. நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.

13. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.

சங்கீதக்காரன் தன்னுடைய இக்கட்டான வேளையில் இவ்விதம் ஜெபிக்கிறார். வியாதிப்பட்ட நேரத்தில் ஒரு பக்கம் வியாதியின் பாதிப்பு மறுபக்கம் மற்றவர்கள் பேசும் பேச்சு, இவைகளினால் வருத்தப்பட்டுச் சொல்லுகிறார். தேவன் மனிதர்களைபோலல்ல என்பதை தாவீது அறிந்திருக்கிறார். அவரிடத்தில் இரக்கம், அன்பு, மன்னிப்பு, கிருபை உண்டு. ஆகவே தேவனிடத்தில் செல்லுவேன் என்கிறார். நம்முடைய வாழ்க்கையிலும் மனிதர்கள் என்ன சொன்னாலும் தேவனை நோக்கிப் பார்க்கிறவர்களாய் இருக்கவேண்டும். மற்றவர்களின் பேச்சு நம்மை முற்றிலும் சோர்புற்று கலங்கிபோகவோ, சமாதானத்தை முற்றிலும் இழந்துப்போகவோ அனுமதிக்கக்கூடாது. இவ்விதமான நேரங்கள், நம்முடைய ஆத்தும நன்மைக்காகவே அனுமதிக்கப்படுகின்றன. மனிதனைச் சார்ந்துக்கொள்ளாமல் தேவனச்சார்ந்துக் கொள்ள, தேவன் நம்முடைய வாழ்க்கையில் இவைகளை அனுமதிக்கிறார். மனிதர்கள் நமக்கு தீமைசெய்வதைப்போல இது கானப்பட்டாலும் தேவன் நம்முடைய ஆத்தும நன்மைக்கென்று இவைகளை அனுமதிக்கிறார்.

 தாவீது அந்த நேரத்தில் தேவனை சலித்துக்கொள்ளவில்லை அந்த நேரத்தில் தேவனிடத்தில் இரக்கத்திற்காக கெஞ்சினார். ‘ஆண்டவரே நீரே எனக்கு தஞ்சம். நீர் எனக்கு உதவிச்செய்யும்.’ ஒருவேளை இந்த வியாதி அவருடைய பாவத்தின் விளைவாக அனுப்பப்பட்ட தண்டனையாக இருந்திருக்கலாம். அதினால் ஒரு பரிசுத்த பயம் அவரை ஆட்கொண்டது. இது நல்லது, இதில் தவறில்லை அவருடைய இருதயத்தை ஆராய இது நல்ல தருணமாகக் காணப்பட்டது.

ஆகவேதான் தாவீது ‘உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்’ என்று ஜெபித்தார். மேலும் அவருடைய சரீர வியாதியைக் காட்டிலும் அவருடைய ஆத்தும வியாதி கொடியதாய் இருக்கிறது என்று உணர்ந்தார். ஆகவே ‘என் ஆத்துமாவை குணமாக்கும் என்று நான் சொன்னேன்.’ என்று சொன்னார். தேவன் நம்முடைய வாழ்க்கையில் அனுமதிக்கிற காரியம் எதுவாக இருந்தாலும் அது நம்முடைய ஆத்தும நன்மைகே என்பதை விசுவாசி.

 

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.