உமக்குச் சித்தமானால்  | ஜீன் : 7  

 

’அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைபணிந்து; ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்’

 

 மத்தேயு 8 : 2  

            

வேத பகுதி | மத் 8 : 1 – 10

1. அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்.

2. அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.

3. இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.

4. இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.

5. இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து:

6. ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.

7. அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்.

8. நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.

9. நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான்.

10. இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 8 : 1 – 10

இந்த மனிதனின் மேலான ஆவிக்குரிய விசுவாசத்தையும், தன்மையையும் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு காலம் இந்தவியாதியினால் பீடிக்கப்பட்டிருந்தான் என்பது நமக்குத்தெரியாது. ஆனால் இவனை இங்கு ‘குஷ்டரோகி’ என்று அழைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். அந்த நாட்களில் குஷ்டரோகம் கடுமையான வியாதியாக இருந்தது, மிகவும் கொடியது. அதில் பாதிக்கப்பட்டவர்கள் ஊருக்கு உள்ளே கூட அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆகவே அவர்கள் வியாதியே ஒர் கொடியது என்றாலும், சமுதாயத்தின் புறக்கணிப்பு மறுப்பக்கத்தில் வேதனையாக இருந்தது. அவ்விதமான ஒரு மனிதன் இயேசுவினிடத்தில் வந்து அவரைப் பணிந்து கொள்ளுகிறான். அவன் வியாதியின் கொடுமையினிமித்தம் தன்னை சுகப்படுத்த வேண்டும் என்று இயேசுவினிடத்தில் கேட்காமல் ‘ஆண்டவரே! உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்’ என்றான்.

            இவன் இதின் மூலம் இரண்டு காரியங்களை அங்கிகரித்தான். ‘முதலாவது தேவனுடைய சித்தம், இரண்டாவது தேவனுடைய வல்லமை, தேவனுடைய சித்தம் நன்மையானது’ (ரோமர் 12 : 2) என்று பார்க்கிறோம். இன்றைக்கு அநேகர் தேவனுடைய சித்தத்தை தேடினால் ஒருவேளை அது என்னுடைய சித்தத்திற்கு ஏற்றதாக இருக்காதோ என்று எண்ணுகிறார்கள். தேவனுடைய சித்தம் நன்மையானது. பூரணமானது. அதைத்தேடி அதற்கு ஒப்புக்கொடுப்பதே நம்முடைய வாழ்க்கையில் நல்லது.

            அந்த மனிதன் தேவனுடைய வல்லமையையும் அறிந்திருந்தான். அவனுடைய வியாதி கொடியதுதான் ஆனால் தேவனுக்கு அது  ஒரு பொருட்டல்ல என்பதை விசுவாசித்தான். உன்னுடைய பிரச்சனை எவ்வளவு கொடியதாக இருந்தாலும், தேவனுடைய வல்லமையை சந்தேகிக்காதே. இவை இரண்டையும் அங்கிகரித்த அந்த குஷ்டரோகி அந்தக் கொடியவியாதி நீங்கினவனாய் திரும்பி சென்றான். எப்போதும் தேவனுடைய சித்தத்தில் நன்மை உண்டு என்பது, உன்னை அவருடைய நீதியைத் தேட உற்சாகப்படுத்தட்டும்.

 

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.