“அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்”
(1யோவான் 4:7-8).

யோனா 2 : 10

1. பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

2. தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.

3. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

4. பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.

5. அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.

6. நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.

7. பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.

8. அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.

9. தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

10. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.

11. பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.

12. தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.

13. அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.

14. பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.

15. இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.

16. தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.

17. நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்.

18. அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.

19. அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.

20. தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?

21. தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.

மறுபிறப்பின் ஒரு முக்கியமான அடையாளம் அன்பு. ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மறுபிறப்பு என்பது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையான செயல். அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவனை அறிந்திருக்கிற மிக முக்கியமான அம்சம் அன்பு. அன்பில்லாமல் நான் தேவனை அறிந்திருக்கிறேன் என்று சொல்வது வேதத்தின்படி சரியல்ல. பவுல் சொல்லுகிறார் எனக்குள் அன்பில்லை என்றால் நான் ஒன்றுமில்லை என்று. நமக்குள் அன்பு இல்லாதபொழுது தேவனுக்கும் நமக்குமான உறவு சரியாக இருக்க முடியாது. தேவனோடு கொண்டிருக்கும்படியான உறவு மிக முக்கியமானது. அந்த உறவை நாம் காத்துக்கொள்வதற்கு அன்பு மிகத் தேவை. 1 கொரிந்தியர் 13ஆம் அதிகாரத்தில் பவுல் அன்பைக் குறித்தும் மிகத் தெளிவாக விளக்குகிறார். ஒருவன் மறுபடியும் பிறந்திருந்தால் மட்டுமே அவனில் இந்த தெய்வீக அன்பு காணப்பட முடியும். தேவனுடைய அன்பு நம்முடைய வாழ்க்கையில் இல்லாமல் இருக்குமானால் நான் நிச்சயமாக ஆண்டவருக்குப் பிரியமாக வாழ முடியாது. ஒருவேளை நாம் ஜெபிக்கலாம், வேதம் வாசிக்கலாம், ஆனாலும் தேவப் பிரசன்னத்தைக் காத்துக்கொண்டு வாழுகிற வாழ்க்கையாக அது இருக்காது. தேவனுடைய மகிழ்ச்சி நம்முடைய வாழ்க்கையில் இருக்காது. தாழ்மை அங்கு இருக்காது. மற்றவர்களை மன்னிக்க முடியாத சுபாவம், பெருமை இப்படிப்பட்டவைகளே காணப்படும். தேவன் என்னை எந்தவிதமான தகுதியின் அடிப்படையில் என்னை நேசிக்கவில்லை. ஆகவே இதை நான் உணரும்போது அவரை நான் நேசிக்கிறேன். அது என் இருதயத்திற்கு சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது. என் பாவத்திலிருந்து எனக்கு விடுதலை கொடுத்திருப்பார் என்றால் அது அவருடைய அன்பின் பிரதிபிலிப்பு. இவ்விதமாக என்னை நேசித்த அன்பை நான் எவ்விதம் புறக்கணிக்க முடியும்? அநேக வேளைகளில் நாம் தேவனை மெய்யாய் நேசிக்காமல் வெறுமையாக வேதத்தை வாசித்து ஜெபிக்கிறோம். இது மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல. நம்முடைய இருதயம் தேவ அன்பினால் நிரப்பப்படுகிறதா? அல்லது பல சூழ்நிலைகளினால் சமாதானம் அற்ற நிலையில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோமா? தேவன் கிறிஸ்துவுக்குள்ளான இந்த அன்பைக் கொண்ட வாழ்க்கையை நமக்குத் தருவாராக.

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.