(பிலி 1:21).
பிலிப் 1:20-30
20. நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.
21. கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.
22. ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்.
23. ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன், தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;
24. அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.
25. இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மறுபடியும் உங்களிடத்தில் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவுக்குள் பெருகும்படிக்கு,
26. உங்கள் விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன்.
27. நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராகமாத்திரம் நடந்துகொள்ளுங்கள்.
28. நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.
29. ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.
30. நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.
இந்த உலகத்தில் ஒரு கிறிஸ்தவன் எதற்குமே பயப்படவேண்டிய அவசியமில்லை. ஏனென்று கேட்டால் அவனுடைய நம்பிக்கை கிறிஸ்துவாக மாத்திரமே இருக்கும். மரணமே ஆனாலும் அவனுக்கு அது இழப்பு அல்ல லாபமே. ஏனென்றால் அவனுடைய வாழ்க்கை இந்த உலகத்தில் முடியும்பொழுது மேலான மகிமையின் வாழ்க்கைக்குள் பிரவேசிக்கிறானே ஒழிய, அவன் இழப்பது ஏதுமில்லை. ஆகவே தான் பவுல் பிலிப்பியர் 1:20 – ல் “நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்” என்று சொல்லுகிறார்.
வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் ஒரு கிறிஸ்தவன் வெற்றியோடே கடந்து போக முடியும். இந்த உலகத்தின் காரியங்கள் நிலையானவைகள் அல்ல, அழிந்து போகக்கூடியவைகள். இவைகளில் தேவன் நமக்கு கிருபை காண்பிக்கிறார். ஆனாலும் இவை பிரதானமானது அல்ல என்பதை நாம் எப்பொழுதும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். நம்முடைய பிரதானமான காரியம் என்னவென்றால் கிறிஸ்து நமக்கு ஜீவன் அவரோடே கூட மகிமை அடையும்படியாக வாஞ்சிக்க வேண்டும். ஆகவேதான் கொலோசெயர் 3:4-ல் பவுல், “நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்” என்று சொல்லுகிறார்.
ஆகேவ இந்த உலகத்தின் காரியங்களினால் நசுங்குண்டு போகவேண்டிய அவசியமில்லை. இன்னுமாக பவுல் “பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்” (2 கொரி 5:1) என்று சொல்லுகிறார். ஆகவே அருமையானவர்களே இந்த உலகத்தின் காரியங்கள் உன் ஆத்துமாவை அழிக்கும்படியான பலனற்ற காரியங்களை ஒருபோதும் உன் வாழ்க்கைக்குள் அனுமதியாதே. கர்த்தர் நிச்சயமாக உன் வாழ்க்கையில் துணையாக நின்று நித்திய ஜீவன் தருவார் என்பதில் உறுதியாயிரு.
free books for download
Sermon Download
Reformed Baptist Church - website
You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.