எபி 6 : 11 – 20
11. நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து,
12. உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.
13. ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு:
14. நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.
15. அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்.
16. மனுஷர் தங்களிலும் பெரியவர்பேரில் ஆணையிடுவார்கள்; உறுதிபண்ணும்படிக்கு ஆணையிடுதலே சகல விவாதத்திற்கும் முடிவு.
17. அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்.
18. நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.
19. அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.
20. நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.
ஆவிக்குறிய அசதி மிகவும் ஆபத்தானது. இன்றைக்கு அநேகர் இவ்விதமாக ஜீவிக்கிறார்கள். ஆங்கிலத்தில் ஆமை ஊறுவதுபோல் ஊறுகிறவர்கள் என்று சொல்லுகிறது. தேவன் தம்முடைய வார்த்தையில் அநேக ஆசீர்வாதங்களை வாக்குப்பண்ணியிருக்கிறார். அதை பெறும் வழியையும் இங்கு சொல்லியிருக்கிறார். அநேகர் ஆசீர்வாதங்களை விரும்புகிறார்கள். இது தவறல்ல. அநேக ஊழியர்கள் ஜனங்கள் மேல் ஆசீர்வாத மழையை பொழிகிறார்கள். அதாவது, ஆசீர்வாதமான வார்த்தைகளை அல்லி கொட்டுகிறார்கள். ஆனால் ஊழியர்களின் வெறும்வார்த்தைகள் ஒருபோதும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவராது. அது தேவனுடைய வார்த்தைக்கு ஏற்றதாக இருக்குமானால் மாத்திரமே அது சரியானது.
இவ்விதமாக வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை பெறுவதற்கு இரண்டு காரியங்கள் சொல்லப்படுகிறது. 1. விசுவாசம் 2. நீடிய பொறுமை . இவ்விதமாக ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்த மக்களை நாம் பின் பற்றவேண்டும். நமது விசுவாசப் பிதாக்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களை இவ்விதமாகவே பெற்றார்கள். இதுவே நமக்கும் வழியாக இருக்கிறது. முதலாவது, நமக்கு விசுவாசம் தேவை. ஆபிரகாமுக்கு தேவன் ‘உன்சந்ததியை ஆசீர்வதிப்பேன்’ என்று, ஈசாக்கு பிறவாததற்கு முன்பே சொன்னார். ஆபிரகாம் அதை விசுவாசித்தான். தொடர்ந்து விசுவாசத்தோடு காத்திருந்தான். தேவன் அவ்விதமாகவே வாக்குப்பண்ணினபடி கொடுத்தார்.
மேலும், ஆசீர்வாதங்களை பெற நீடிய பொறுமையும், தேவையாய் இருக்கிறது. சிலர் ஆசீர்வாதம் என்றால் உடனே கிடைக்கவேண்டும், இல்லையென்றால் வெகு சீக்கிரத்தில் சோர்ந்துவிடுவார்கள். அது சரியல்ல. தேவன் ஆபிரகாமுக்கு சந்ததியை உண்டாக்குவேன் என்று சொன்ன வாக்குத்தத்தம் நிறைவேற 25 வருடங்கள் காத்திருக்கவேண்டியிருந்தது. காலதாமதமானாலும் நீடிய பொறுமயோடு காத்திருப்பாயானால் தேவனுடைய ஆசீர்வாதத்தை நீ பெறமுடியும்.
free books for download
Sermon Download
Reformed Baptist Church - website
You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.