அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தை தள்ளாதிருக்கிறீர்’. (சங் 21 : 2)

சங் 21 : 1 – 13

1. கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!2. அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா.)3. உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்.4. அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்.5. உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாயிருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு அருளினீர்.6. அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.7. ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்; உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.8. உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.9. உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப்போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும்.10. அவர்கள் கனியை பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர்.11. அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்; தீவினையை எத்தனம்பண்ணினார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று.12. அவர்களை இலக்காக வைத்து, உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர்.13. கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக்கீர்த்தனம்பண்ணுவோம்.
மனவிருப்பம் என்பது எல்லா மனிதர்களும் பெற்றிருப்பது. அது பலவிதமானது. ஆனால் இங்கு தேவனுடைய பிள்ளைகளின் மனவிருப்பத்தைக் குறித்துச் சொல்லப் படுகிறது. இதைக்குறித்து நாம் தெளிவாய் அறிந்திருத்தல் அவசியமானது. இன்றைக்கு அநேக ஊழியர்கள், வீடுகளில் சென்று ‘கர்த்தர் உன் மன விருப்பத்தின்படி தந்தருளுவாராக’ என்று ஜெபிப்பதும், ஆசீர்வதிப்பதும் சகஜமாய்க் காணப்படுகிறது.தேவ பிள்ளைகளின் மனதில் ஏற்படும் விருப்பங்கள் எல்லாம் எப்போதும் சரியானதாக இருக்குமா? நாம் அப்படி சொல்லமுடியாது. அது நம்முடைய ஆவிக்குரிய நிலையைப் பொறுத்தும் இருக்கிறது. அது ஒரு வேளை மாம்சத்துக் குறியதாகவோ அல்லது ஆவிக்குறியதாகவோ இருக்கலாம். அது நன்மைக்கு ஏதுவானதாகவும் இருக்கலாம் அல்லது தீமைக்கு ஏதுவானதாகவும் இருக்கலாம். ஆகவே எந்த மனவிருப்பத்தைக்குறித்தும் நாம் நிதானமாய் தேவ வார்த்தையின் படியாக யோசித்துப்பார்க்கவேண்டும்.எந்த மனவிருப்பமாக இருந்தாலும் அதை தேவனுடைய கரத்தில் ஒப்புக்கொடுத்து முதலாவதாக ஜெபிக்கவேண்டும். ‘ஆண்டவரே! நான் விரும்புகிற இந்தக் காரியம் உமக்குப் பிரியமானதா, ஏற்றதா, அது உமக்கு மகிமையாய் இருக்குமா? என்று தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்க வேண்டும். தேவனுக்காக கத்திருக்கவும் வேண்டும். சில மக்கள் விடாப்பிடியாக ஜெபித்து எப்படியும் அதை நான் பெற்றே ஆகவேண்டும் என்று செயல்படுவது சரியா? அது சரியல்ல. ஒப்புக்கொடுத்து ஜெபித்து செயல்படுவது நம்முடைய மனதையும் தேவனுக்குள்ளாக பக்குவப்படுத்தும். மேலும் தேவன் ஆம் என்று சொன்னாலும், இல்லை என்று சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும்படியான மனதுள்ளவர்களாய்க் காணப்படவேண்டும். தேவன் தம்முடைய சர்வ ஞானத்தைக் கொண்டு அந்த காரியத்தில் செயல்படுகிறார். இது தேவ வார்த்தையின்படி சரியான விருப்பமா என்பதை வேத வசனங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கஏண்டும். இதுவே சரியான வழி.

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.