‘படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்கிறவனைப் பாம்பு கடிக்கும்’ (பிரசங்கி 10 : 8)

பிரசங்கி . 10 : 1 – 10

1. செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.

2. ஞானியின் இருதயம் வலதுகையிலும், மூடனின் இருதயமோ இடதுகையிலும் இருக்கும்.

3. மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாயிருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லாருக்கும் சொல்லுகிறான்.

4. அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன் ஸ்தானத்தை விட்டு விலகாதே; இணங்குதல் பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும்.

5. நான் சூரியனுக்குக்கீழே கண்ட ஒரு தீங்குண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தப்பிதமே.

6. மூடர் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்; சீமான்களோ தாழ்ந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

7. வேலைக்காரர் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர்போல் தரையிலே நடக்கிறதையும் கண்டேன்.

8. படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.

9. கல்லுகளைப் பேர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் மோசப்படுவான்.

10. இருப்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிக பலத்தைப் பிரயோகம்பண்ணவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம்.

மற்றவர்களுக்கு தீமையை நினைப்பது, மற்றவர்களின் கஷ்டத்தில் சந்தோஷப்படுவது, ஒரு கிறிஸ்தவனின் குணமல்ல. மற்றவர்கள் தீமையை அனுபவிப்பதினால் உனக்கு என்ன பயன் கிட்டும்? அவர்களின் அழிவை நீ ஏன் உன் இருதயத்தில் இரகசியமாக விரும்புகிறாய்? சிலர் நன்றாக பேசுவார்கள். ஆனால் அவர்கள் உள்ளம் மற்றவர்களின் கெடுதியையே விரும்பிக் கொண்டிருக்கும். உலக மனிதன் அவ்விதமாகதான் இருப்பான். தேவனை அறியாதவன் அவ்விதம் எண்ணுவான், செயல்படுவான்.உன்னுடைய இருதயத்தில் இவ்விதமான தவறான எண்ணங்களை அனுமதிக்கும் போது உன் இருதயத்தில் பாவத்தை அனுமதிக்கிறாய். அது கிறிஸ்துவின் சிந்தைக்கு புறம்பானது. ஆண்டவராகிய இயேசு, ‘உங்களுடைய சத்துருக்களுக்காக ஜெபியுங்கள்’ என்று சொன்னதை மறந்துவிடாதே. உங்களை விரோதிக்கிரவர்களுக்காக ஜெபியுங்கள். உங்கள் இருதயத்தில் சிநேகியுங்கள். அப்போது தேவன் அதில் பிரியப்படுவார்.மேலும் மற்றவர்கள் விழவேண்டும் என்று எண்ணி படுகுழியை வெட்டினால், அதை வெட்டின நீயே அதில் விழவேண்டிவரும். தேவனுடைய வார்த்தை உண்மை. தேவனுடைய வார்த்தை சொல்வதை அலட்சியப்படுத்தகூடாது. அதற்கு பயப்படவேண்டும். இந்த உலகத்தில் மட்டுமல்லாது அகிலலோகத்திலும் அவருடைய வார்த்தையின்படியாகவே தேவன் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார்.வேதத்தில், எஸ்தர் புத்தகத்தில் என்ன பார்க்கிறோம்? ஆமான், மொரதெகாயை கொன்றுவிட வேண்டும் என்று ஐம்பது முழ உயரமான தூக்குமரத்தை தன் வீட்டில் ஆயத்தப்படுத்தினான். ஆனால் முடிவு என்னவாயிற்று? ‘அப்படியே ஆமான் மொரதெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்’ (எஸ்தர். 7 : 10 ) படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான் என்பது எவ்வளவு உண்மையாயிற்று பாருங்கள்

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.