Share the message
கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மை பிரிப்பவன் யார்? – ரோமர் 8 : 36

ரோமர் 8 : 28 – 39

28. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

29. தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

30. எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.

31. இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

32. தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

33. தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.

34. ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.

35. உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,

36. கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?

37. இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.

38. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,

39. உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

ஒவ்வொரு மெய்கிறிஸ்தவனும் இவ்விதமாக சொல்லுகிறானாகவே இருப்பான், இருக்கவேண்டும். பாவியான தன்னை இரட்சித்த தேவனை நேசிப்பதே அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த உலகத்தில் அநேகருக்கு கொடுக்கப்படாத இந்த இரட்சிப்பை தனக்கு அருளின தேவனில் அன்பு கூராமல் எப்படி இருக்கமுடியும்? அவனை மீட்க்கும்படி அவர் பட்ட பாடுகள், அடைந்த நிந்தைகள், அவமனங்கள், அவன் உள்ளத்தை உருக்கவே செய்யும். ஆனால் அவன் இப்போது செல்லுவது இடுகமான பாதை. மனிதர்கள் இந்த இடுக்கமான பாதையை விரும்புவதில்லை. அவன் சுமந்து செல்லவேண்டிய சிலுவை இப்போது உண்டு. ஆனால் இவைகள் மத்தியில் பவுலைபோல அவனும் கிறிஸ்திவின் அன்பைவிட்டு நம்மை பிரிப்பவன் யார்? என்று சொல்லக் கூடியவனாக இருக்கிறான். இன்றைக்கு மிகச்சிறிய சோதனை என்றாலும் தேவனை விட்டு ஓடுகிற அநேக கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்.

பவுல் இந்த அன்பை சோதிக்க அவருக்கு வந்த சோதனைகளை இங்கு குறிப்பிடுகிறார். ‘உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வானமோ, நாசமோசமோ, பட்டயமோ என்று சொல்லுகிறார். இவைகள் மாத்திரமல்ல இதுபோன்ற எண்ணிலடங்கா சோதனைகள் ஏற்படலாம். மேலும் பவுல் என்ன சொல்லுகிறார்? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூறுகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.’ இவைகளில் சோர்ந்து கிறிஸ்துவை விட்டு விலகிபோக அல்ல, இவைகளின் மத்தியிலும் தேவன் கொடுக்கும் பெலத்தால் ஜெயம்கொள்ளுவோம். என்றல்ல, ஜெயங்கொள்ளுகிறோம் என்று எழுதுகிறார். மேலும் மரணமானாலும், ஜீவனானலும், தேவதூதர்களானலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைபிரிக்கமாட்டாதென்று நிச்சயத்திருக்கிறேன். (ரோமர். 8 : 38 – 39)

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.