பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையை போக்கடிக்கிறார்கள்
(யோனா 2 : 8)
யோனா 2 : 10
1. அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:2. என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.3. சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.4. நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆகிலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்.5. தண்ணீர்கள் பிராணபரியந்தம் என்னை நெருக்கினது; ஆழி என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது.6. பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர்.7. என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது.8. பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.9. நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.10. கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது.
இந்த உலகத்தில் எல்லோருக்கும் தேவனுடைய மெய்யான சத்தியத்தை கேட்கும்படியான தருணம் கிடைப்பதில்லை. சொல்லப்போனால் சத்தியத்தை கெட்க்கும்படியான வாய்ப்பே இல்லாத அநேகர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களைக் குறித்து இங்குச் சொல்லப்படவில்லை. அப்படியானால் யாரைக் குறித்து இங்குச் சொல்லப்படுகிறது? தங்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய சத்தியத்தை தெளிவாய் கேட்கிறவர்கள் இவர்கள். தேவனைப் பற்றிக்கொள்ளும்படியான வெளிச்சத்தைக் குறித்து அதிகம் தெரிந்தவர்கள். அவர்களுக்கு முன்பாக தேவனுடைய மக்களின் வாழ்க்கை, அவர்களுடைய கீழ்படிதல், விசுவாசம் மற்றும் சாட்சி போன்றவற்றை காண்கிறவர்கள். வேதாகமம அவர்கள் கையில் இருக்கிறது. தேவ பிள்ளைகளின் ஐக்கியம் பெற அருமையான வாய்ப்பு இருக்கிறது. சபை கூட்டங்கள் மற்றும் ஆவிக்குரிய வழிகளில் வளர்வதற்காண தருணங்களும், வாய்ப்புகளும் பெற்றவர்கள். இன்னும் பலவிதமான ஆவிக்குரிய சிலாக்கியங்களை தங்களுடைய வாழ்க்கையில் பெற்றவர்கள்.இவ்விதமான அநேக ஆவிக்குரிய நன்மைகளை பெற்றும் அவைகளை அலட்சிய படுத்தும் போதும், அவைகளை உயர்வாக எண்ணிக்கொளாத போதும் தேவன் தங்களுக்குக் கொடுக்கும் கிருபையின் சிலாக்கியங்களைப் போக்கடிக்கிறவர்கள், அதாவது வீணடிக்கிறார்கள்.இவ்விதமன மக்கள் இரண்டு விதமான காரியங்களைத் தெரிந்துக் கொள்ளுகிறார்கள். (1) பொய்யானது (2) மாயையானது. அதாவது அவர்கள் எதை மேன்மையாக உயர்வாக கருதுகிறார்களோ அவைகள் பொய்யானவைகள். அவர்கள் உலகமும் அதின் காரியங்களும் தங்களுக்கு மேன்மையை தரும் என்று எண்ணுகிறார்கள். அது ஒரு போதும் தராது. இரண்டாவதாக, அது மாயையானது. அது வெறுமையான தோற்றத்தைக் கொண்டிருக்குமே ஒழிய அது நிலையானது அல்ல. உன் நிலை என்ன?
free books for download
Sermon Download
Reformed Baptist Church - website
You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.