நவம்பர் 6 இயேசுவில் நிலைத்திருத்தல் யோவான் 15 :1-10
‘என்னில் நிலைத்திருங்கள்.’ (யோவான் 15 : 4)
இயேசுவில் நிலைத்திருக்கிற வாழ்க்கை உனக்கு உண்டா? அநேகர் இயேசுவில் நிலைத்திருக்கவில்லை. இயேசுவை தவிர மற்றவைகளில்தான் நிலைத்திருக்கிறார்கள். ஆனால் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளுகிறார்கள். ஒருவர் இயேசுவில் நிலைத்திருக்கிறாரா இல்லையா என்பதை கீழ்காணும் ஐந்துக் காரியங்களில் இருந்து அறிந்துக்கொள்ளலாம். அவைகள் யாவன?
முதலாவது, அவரில் நிலைத்திருக்கிறவன் தேவனுக்கென்று மிகுந்த மனிகளைக்கொடுப்பான். ‘நானே திராட்சை செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால் அவன் மிகுந்த கனி கொடுப்பான்.’ யோவான் 15 : 5) நீ அவரில் நிலைத்திருக்கும்போது அநுதினமும் ஆவிக்குறிய சத்துவத்தைப் பெறுவாய். அவருடைய வார்த்தைய உட்க்கொண்டு அநுதினமும் தேவ ஆவியானவரால் பெலப்படுவாய். உன் வாழ்க்கை ஆவிக்குறிய நற்கனிகளைக் கொடுப்பதோடு அநேகம் ஆத்துமாக்களைக் கர்த்தருக்குள் கொண்டுவரும். உன் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.
இரண்டாவதாக, தேவனிடத்திலிருந்து அநேக ஜெபங்களுக்குப் பதிலைப் பெற்ற ஒரு ஜெப வாழ்க்கை உனக்கு இருக்கும். நீ தேவனிடத்தில் ஜெபிக்கும்போது ஆச்சரியமான விதங்களில் தேவன் உன் ஜெபத்திற்கு பதிலளிப்பதக் கான்பாய். இன்னும் அது உன் ஜெப வாழ்க்கைக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். ‘நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.’ (யோவான் 15 : 7)
மூன்றாவதாக, நீ தேவனுடைய பிள்ளை என்பதின் நிச்சயத்தை அது உனக்கு கொடுக்கும். நீ வெட்க்கப்பட்டுப் போகமாட்டாய். ஆவிக்குறிய தைரியத்தைக் கொண்டவனாய் நீ வாழுவாய். ‘பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்.’ (1யோவான் 2 : 28) அன்பான சகோதரனே! சகோதரியே! தேவனில் நிலைத்திருக்கிற வாழ்க்கையை வாஞ்சித்து அதற்காக ஜெபி.