(ஏசாயா 49: 23)
ஏசாயா 49 : 16 – 26
16. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.
17. உன் குமாரர் தீவிரித்து வருவார்கள்; உன்னை நிர்மூலமாக்கினவர்களும் உன்னைப் பாழாக்கினவர்களும் உன்னைவிட்டுப் புறப்பட்டுப்போவார்கள்.
18. உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லாரையும் ஆபரணமாகத் தரித்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.
19. அப்பொழுது உன் வனாந்தரங்களும், உன் பாழிடங்களும், நிர்மூலமான உன் தேசமும், இனிக் குடிகளின் திரளினாலே உனக்கு நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கினவர்கள் தூரமாவார்கள்.
20. பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள்: இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது; நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று, உன் காதுகள் கேட்கச் சொல்லுவார்கள்.
21. அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்? நான் பிள்ளைகளற்றும், தனித்தும், சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்? இதோ, நான் ஒன்றியாய் விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உன் இருதயத்தில் சொல்லுவாய்.
22. இதோ, ஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் குமாரரைக் கொடுங்கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் குமாரத்திகள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
23. ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்;
24. பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கக்கூடுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்ககூடுமோ?
25. என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்; பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன்.
26. உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தருக்குக் காத்திரு. நீ ஒருகாலும் வெட்க்கமடைய மாட்டாய். எந்த காரியமானாலும் கர்த்தருக்காக, அவர் காலத்திர்காக, அவர் நேரத்திற்காகக் காத்திரு. அவர் கொடுக்கும் விடுதலைக்காக எதிர்நோக்கியிரு. இன்றைக்கு எந்தக் காரியமானாலும் உடனடியாக நடைபெறவேண்டும் என்பதற்காக அப்படியும், இப்படியும் சென்று செயல்படுவார்கள். அன்பானவர்களே! அது தோல்வியில் முடியும். நீ வெட்கப்பட்டு போவாய்.
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் எப்படிக் காத்திருக்க வேண்டும்? ‘கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன்’ (சங் 40 : 1). கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் பொறுமையோடுக் காத்திருக்கவேண்டும். தேவன் தம்முடையசர்வ ஞானத்தினால் எந்த விதத்தில் எந்த வேளையில் எப்படியாகச் செய்யவேண்டுமோ அப்படியாகச் செய்வார். நாம் அவசரப்படக்கூடாது. அவசரப்படுதல் காரியத்தைக் கெடுக்குமேயொழிய பிரயோஜனப்படாது. ஆபிரகாமுக்குத் தேவன் ஒரு குமாரனை வாக்குப்பண்ணினார். ஆபிரகாம் கர்த்தருடைய காலத்துக்கும் நேரத்துக்கும் காத்திருக்கத் தவறினான். ஆபிரகாமுடைய மனைவி, ஆபிரக்காம் கத்திருத்தலுக்கு தடையாக இருந்தாள். எத்தனை சமையங்களில் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் இவ்விதம் இடறலாயிருக்கிறார்கள்? தங்களுடைய காரியங்களில், தங்கள் பிள்ளைகளின் படிப்பு, திருமணம் ஆகிய காரியங்களில் தேவனுக்காக காத்திருப்பதில்லை.
ஆபிரகாமின் மனைவி சாராள், ஆபிரகாமுக்கு ஒரு ஆலோசனைக் கொடுத்தாள். ‘நாம் கர்த்தருக்காக எவ்வளவு காலம் காத்திருக்கமுடியும்? என் வேலைகாரி ஆகாரை உனக்குத் தருகிறேன் என்றாள். ஆம்! ஆபிரகாமுக்கு அந்தத் தவறான யோசனைக்கு இணங்க்கிக்கொடுத்தான், அதனால் எத்தனை தேவையில்லாத பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது பாருங்கள். ஒருவேளை மற்றவர்கள் உனக்கு அவ்விதம் கர்த்தருக்கு காத்திருப்பதைத் தவிர்க்கும்படியான ஆலோசனைகள் கொடுக்கலாம். ஆனால் நீ அவர்களுக்குச் செவிகொடுப்பாயானால் நிச்சயம் பிற்காலத்தில் வெட்க்கப்படுவாய்.
free books for download
Sermon Download
Reformed Baptist Church - website
You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.