Share the message
இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள். ( சங்கீதம் 12 : 1 )

சங்கீதம் 12 : 1–8

1. இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்.

2. அவரவர் தங்கள் தோழரோடே பொய் பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.

3. இச்சகம்பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார்.

4. அவர்கள்: எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையது; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.

5. ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

6. கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.

7. கர்த்தாவே, நீர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்தச் சந்ததிக்கு விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.

8. மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.

தாவீது இதை ஜெபமாக ஏறெடுக்கிறார். ‘ஆண்டவரே என்னை நீர் இக்காலத்தில் இரட்சித்துக்கொண்டருளும். நாட்கள் கொடியதாயிருக்கிறது. மெய்யான சத்தியத்தை பின்பற்றுகிறவர்கள் மிக மிகக் குறைவு. ஆண்டவருக்காக வாழவேண்டும் என்று வாஞ்சையுள்ளவர்கள், வைராக்கியமுள்ளவர்களைப் பார்பது அரிதாயிருக்கிறது. மக்கள் மாயையை நம்பி சென்று கொண்டிருக்கிறார்கள்.’ இது எவ்வளவு உண்மையாயிருக்கிறது! தாவீதின் அந்நாட்களில் மாத்திரமல்ல, நம்முடைய நாட்களிலும் அவ்விதமாகவே காலங்கள் கொடியதாயிருக்கிரதைப் பார்க்கிறொம். ஆனால் தாவீதைப் போல இந்த நாட்களில் ஆண்டவரே, என்னை உம்முடைய வழிக்குள்ளாக காத்துக்கொள்ளும். நான் உமக்காக ஜீவிப்பேன். உம்மையே நேசித்துப் பின்பற்றுவேன் என்று சொல்ல உன்னில் வாஞ்சை இருக்கிறதா? ஆம்! அவ்விதமான வாஞ்சை நமக்குள் காணப்பட வேண்டும். உலகத்தைக் கண்டு அதோடு ஒத்துப்போய் கொண்டிருக்கிறது, உலகமே அப்படித்தான் இருக்கிறது, அதன் மத்தியில் நான் ஆண்டவருக்கென்று ஜீவிப்பது முடியாது என்றும் எண்ணுகிறாயா? அது தவறு.ஒரு வேளை நீ பணி செய்யும் இடத்தில், உன்னை சுற்றியிருக்கும்படியான மக்கள் தேவபக்தியற்றவர்களாக இருக்களாம். ஆனாலும் நீ சோர்ந்து போகாதே. அங்குதான் உன் வெளிச்சம் இருளில் பிரகாசிக்கிறதைப் போலக் காணப்பட வேண்டும். அநேகர் உன்னைப் பார்த்து பரியாசம் பண்ணலாம். ஆனாலும் சோர்ந்துப் போகாதே. ஒவ்வொரு நாளும் நீ அவர்கள் மத்தியில் ‘தேவனே, என்னை உம்முடைய சாட்சியாகக் காத்துக்கொள்ளும். நான் உம்முடைய பிரதிநிதியாக அவர்கள் மத்தியில் வைக்கப்பட்டிருக்கிற வேளையில் நான் உமக்குச் சாட்சியற்றவனாய் வாழக்கூடாது. எனக்கு அதற்குண்டான பெலத்தைத் தாரும். உம்முடைய பெலம் இல்லையேன்றால் என்னால் முடியாது’ என்று ஜெபி. தேவன் பெலத்தைக் கொடுப்பார். தேவன் பிலதெல்பியா சபையைப்பார்த்துச் சொன்னவண்ணம் உனக்குச் சொல்லுவார். உன்னை அழைத்திருக்கிற தேவன் உன்னை வெட்கப்படுத்தமாட்டார்.

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.