Share the message

 

“சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய்,
அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்”.

 

  (நீதி 6:6)

            

வேத பகுதி | நீதிமொழிகள் 6 : 1 -11

1. என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால்,

2. நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.

3. இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய்.

4. உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.

5. வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.

6. சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.

7. அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,

8. கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.

9. சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?

10. இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?

11. உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்.

ஞானத்தை நாம் கற்றுக்கொள்ளும்படியாக பெரிய ஞானியை வைக்கவில்லை. எறும்பை வைத்திருக்கிறார். நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார். எறும்பினுடைய ஞானத்தைப் பார். எறும்பு சரியான காலங்களில் தனக்குத் தேவையான தானியங்களைச் சேர்த்து வைப்பதுண்டு. அந்த தானியங்களை சேர்க்கும்போது, அவைகள் முளைக்காமல் இருக்க விதையின் அந்தப்பகுதியைக் கடித்துவிட்டு, பத்திரமாய் சேர்க்கும். தேவன் படைத்த அந்த சிறிய எறும்பினிடத்தில் எவ்வளவு பெரிய ஞானம் உள்ளது என்பதைப் பாருங்கள்.

      அருமையான சகோதர, சகோதரியே இன்றைக்கு நாம் ஆவிக்குரிய சோம்பேறியாக இருக்கிறோமா? இன்றைக்கு அநேகர் ஆவிக்குரிய சோம்பேறியாக இருக்கிறார்கள். ஆகவே அவர்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய மெய்யான ஆசீர்வாதத்தைப் பார்க்க முடிவதில்லை. நீதிமொழிகள் 6:9 –ல் “சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?” என்று வேதம் கடிந்து கொள்ளுகிறது. வேதம் சொல்லுகிறது அதிகாலையில் தேவனை தேட வேண்டும் என்று. ஆனால் அநேகர் படுக்கையிலிருந்து எழும்புவதை விரும்புவது கிடையாது. இன்றைக்கு எத்தனையோ வாலிபர்களும் அவ்விதம் இருக்கிறார்கள்.

    ஆகவே நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் கர்த்தருக்குரிய காரியங்களில் விழிப்பாய் காணப்படுவது நல்லது. நீ சோம்பேறியாக இருக்கும்பொழுது அநேக காரியங்களை விரும்பலாம், ஆனால் அது உனக்கு கிடைக்காது என்று வேதம் சொல்லுகிறது. “சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்” (நீதி 6:4). நண்பர்களே! நமக்கு ஆவிக்குரிய ஜாக்கிரதை தேவை. மேலும் வேதம் சொல்லுகிறது, “சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை” (நீதி 15:19). உன்னுடைய வாழ்வில் நீ சோம்பேறியாய் இருக்கும்போது, உன் வாழ்க்கை கரடுமுரடான முள்வேலிக்கு சமம். விழித்திரு. தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்.

 

 

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.