Share the message
‘முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த மனுஷம் அங்கே இருந்தான்.’ யோவான் 5 : 5

யோவான் 5 : 1 – 10

1. இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார்.

2. எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு.

3. அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.

4. ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்.

5. முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.

6. படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.

7. அதற்கு வியாதிஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.

8. இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.

9. உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.

10. ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள்.

வியாதிகள், இந்த உலகத்தில் எத்தனை வேதனையை உண்டாக்குகிறது! எத்தனைவிதமான வியாதிகள் புதிது புதிதாக ஒவ்வொறு நாளும் தோன்றுகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக இல்லாத வியாதிகள் இன்று உலகில் தோன்றியிருக்கின்றன. இந்த மனிதன் ஒருவருடம், இரண்டு வருடமல்ல, 38 வருடங்களாக வியாதிப்பட்டிருந்தான்.வியாதியை நாம் எப்படி அணுகுகிறோம் என்பது அவசியமானது. எந்த வியாதியாக இருந்தாலும் அதுவும் ஒரு நோக்கத்தோடு தான் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவன் ஒரு திட்டத்தோடு தான் நம்மில் அதை அனுமதித்திருக்கிறார். அது விஷக்கிருமியால் ஏற்படுகின்ற வியாதியாக இருந்தாலும், அது தேவனுடைய நோக்கமில்லாமல் நமக்கு நிச்சயம் வரமுடியாது. ஆகவே முதலாவது இந்த அடிப்படை வேதத் தத்துவத்தை நாம் நன்கு விளங்கியிருத்தல் மிக அவசியமானது.சரி இந்த வியாதியை தேவன் அற்புதமாக சுகப்படுத்த வேண்டும் என்று ஜெபிக்கலாமா? ஜெபிக்கலாம், தவறில்லை. தேவனால் கூடும். சொல்லப்போனால் எந்த வியாதியையும் நீக்கி சுகப்படுத்துகிறவர் கர்த்தர் தான். வேதத்தின்படி சிகிச்சைபெறுவதை வேதம் தடுக்கிறதா? இல்லை. மருத்துவர்களும் மருந்துகளும் தேவன் இந்த உலகில் நமக்குக் கொடுத்திருக்கும் வழிமுறைகள். அவற்றை புறக்கணீத்து, விசுவாசம் என்ற பெயரில் வறட்டு பிடிவாதமாக இருப்பதை வேதம் ஒருபோதும் அங்கிகரிக்கவில்லை. எத்தனையோ மதியீனமான கிறிஸ்தவர்கள் அவ்விதம் புறக்கணிக்கும் போது அது தற்கொலைக்கு சமமானது.ஆனால், தேவன் வியாதியை ஒருவேளை சுகப்படுத்தாமல் தொடர்ந்து இருக்க அனுமதிப்பாரா? அவ்விதமாகவும் அனுமதிக்கலாம். பவுலுக்கு முள் கொடுக்கப்பட்டது போல ஜெபித்தாலும் அதை நீக்காமலும் இருக்கலாம். ஆனால் ஏன் தேவன் அப்படி செய்கிறார்? நம்முடைய ஆத்தும நன்மைக்காகவே அனுமதித்திருக்கிறார். நீ எந்த வியாதியானாலும் கலங்காமல் பவுலைப் போல ஒப்புக்கொடுத்து ஜெபி. அப்பொழுது தேவன் நன்மையானதைச் செய்வார்.

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.